
புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப்பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் பலர் விசாரணைக்கென்றும் காரணம் கூறப்படாமலும் கைதுசெய்யப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கின்றன.
யுத்தகாலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரும் சரணடைந்த பல போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் பின்னர் இவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் சிலர் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளாத சிலரால் விசாரணைக்கென்றும் சில சமயங்களில் காரணம் எதுவும் கூறப்படாமலும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் கடந்தகாலத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் நடந்திருந்தது. தற்போது இவ்வாறான சம்பவங்கள் யாழ்.மாவட்டத்திலும் அதிகரித்திருக்கின்றது.
கடந்த 2 வாரங்களிற்குள் மட்டும் யாழ்ப்பாணத்தில் சுமார் 20 பேர் வரையில் இவ்வாறு விசாரிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்னமும் பலர் தமது இருப்பிடத்திற்கருகில் உள்ள படைமுகாம்களில் கையெழுத்திடுகின்றனர்.
Montag, 27. Dezember 2010
விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் விசாரணை என்ற பெயரில் கைதாகும் சம்பவங்கள் வன்னியில் அதிகரிப்பு
Montag, Dezember 27, 2010
۞உழவன்۞
RSS Feed
Twitter






0 Kommentare:
Kommentar veröffentlichen