Montag, 10. Juni 2013

நாளாந்தம் 15 ஆயிரம் ரூபாவை பிச்சையாகப் பெற்றவர் கைது

பிச்சையெடுப்பதன் மூலம் நாளொன்றுக்கு 15,000 ரூபாவை பெறும் பிச்சைக்காரரொருவரை பொரளைப் பொலிஸார் கைதுசெய்து மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்த போது நீதிவான் ரஷந்த கொடவெல பிச்சைக்காரரை எச்சரித்து விடுதலை செய்தார்.
நாளாந்தம் பல குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் நாடு முழுவதும் சுதந்திரமாக நடமாடும் போது அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்காமல் பிச்சைக்காரர்களை கைதுசெய்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்வது ஏன் என்றும் நீதிவான் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார்.
பொரளை சுரங்கப்பாதையில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சை எடுத்ததாக பொரளை பொலிஸார் ஒரு யாசகரை கைதுசெய்ததாகவும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை பிச்சை எடுத்ததில் இந்நபர் 1500 ரூபாவை வருமானமாக பெற்றுள்ளதாகவும் இவரை விசாரணை செய்ததில் நாளொன்றுக்கு பிச்சை எடுப்பதன் மூலம் இவர் 15,000 ரூபாவை வருமானமாகப் பெறுவதாகவும் பொரளை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen