இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனின் மனைவி உடல்நலக் குறைவால் இன்று காலை மரணமடைந்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனின் மனைவி ஜாய்ஸ் பாண்டியன் (வயது 77). உடல் நலம் சரியில்லாமல் நடக்க முடியாமல் அவதிப்பட்ட ஜாய்ஸ் பாண்டியனை அண்ணா நகரில் உள்ள ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அரும்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்து விட்டார்.
அவரது உடல் அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் டி.வி.எஸ்.காலனியில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது.
தா.பாண்டியனுக்கு முக்கிய பிரமுகர்கள், கட்சி தலைவர்கள் நேரிலும், போன்மூலமும் ஆறுதல் கூறினார்கள்.
Mittwoch, 17. November 2010
தா.பாண்டியனின் மனைவி மரணம்


0 Kommentare:
Kommentar veröffentlichen