Mittwoch, 17. November 2010

துப்பாக்கியால் சுட்டு மருத்துவர் தற்கொலை

மகன்கள் தனியாக சென்றுவிட்ட விரக்தியில் மருத்துவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காஞ்சீபுரத்தில் பிரபல டாக்டராக திகழ்ந்தவர் மனோகரன் (வயது 70). மருத்துவ படிப்பில் எம்.டி. மற்றும் எப்.ஆர்.சி.எஸ். பட்டங்கள் பெற்றவர்.

காஞ்சீபுரத்தில் ரெயில்வே நிலையம் அருகே “மனோகரன் கிளினிக்” என்ற பெயரில் தனியாக ஆஸ்பத்திரி நடத்தி வந்தார்.

இவரது வீடு ஆஸ்பத்திரி ரோட்டில் இருந்தது. இவரது மனைவி பெயர் டெட்னிசா. பார்த்திபன், பிரேமானந்த், ஜெய்தீப் என்ற மகன்களும், ஜெனீபர் என்ற மகளும் உள்ளனர்.

இவர்களில் 3 மகன்களுமே டாக்டர்கள், மூத்த மகன் பார்த்திபன் சென்னையிலும், பிரேமானந்த் கனடாவிலும் உள்ளனர். ஜெய்தீப் காஞ்சீபுரத்தில் தனியாக ஆஸ்பத்திரி நடத்தி வந்ததுடன் வேறு ஒரு வீட்டில் வசித்து வந்தார். மகள் திருமணமாகி சென்னையில் இருந்தார்.

மனோகரன் மனைவி டெட்னிசா மட்டும் ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

நேற்று இரவு கணவன்- மனைவி இருவரும் வீட்டு வரவேற்பு அறையில் இருந்து நீண்ட நேரம் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். இரவு 10.30 மணிக்கு மேல் இருவரும் படுக்க சென்றனர். சிறிது நேரம் கழித்து மனோகரன் படுக்கையை விட்டு எழுந்து பக்கத்து அறைக்கு சென்றார்.

அப்போது மனோகரன் எதையோ எடுப்பது போன்ற சத்தம் கேட்டது. எனவே டெட்னிசா என்ன சத்தம் என்று கேட்டார். ஒன்று மில்லை நீ தூங்கு என்று கூறினார்.


அடுத்த நிமிடம் துப்பாக்கியால் சுடும் சத்தம் பயங்கரமாக கேட்டது. டெட்னிசா அலறியடித்து ஓடி வந்து பார்த்தார். அங்கு மனோகரன் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

மனோகரன் லைசென்சு பெற்ற “சிங்கிள் ரோல் பிரிஜ் போடிங்” என்ற நீளமான துப்பாக்கி வைத்து இருந்தார். அதை வைத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருந்தார்.

நாற்காலியில் உட்கார்ந்த படி துப்பாக்கி முனையை வாய்க்குள் செலுத்தி காலால் துப்பாக்கி விசையை அழுத்தி வெடிக்க செய்திருந்தார். இதில் வாய்க்குள் பாய்ந்த குண்டு கண் வழியாக பிய்த்து கொண்டு வெளியேறி இருந்தது. இதனால் முகம் கோரமாக சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிவகாஞ்சி டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சிவவேலியப்பர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

மனோகரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை. மனோகரன் தனது நண்பர்களிடம் அடிக்கடி விரக்தியாக பேசிக்கொண்டிருப்பாராம். வயதாகி விட்டால் உயிரோடு இருக்க கூடாது என்றும் சொல்வாராம். இதனால் தான் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மகன்கள் 3 பேரும் வெவ்வேறு இடங்ககளில் வசிக்க வயதான தாய்-தந்தை மட்டும் தனியாக வசித்து வந்தனர். இது அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தி இந்த முடிவுக்கு வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இத்துடன் அவருக்கு கடன் தொல்லை போன்ற பிரச்சினைகள் ஏதும் இருந்ததா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen