Montag, 19. April 2010

தமிழினத்துரோகி கருணாநிதி


News:
கொடுங்கோலர்களின் ஆட்சியில் இப்படித்தான் நடக்கும். விமானத்தில் வந்தது “சொக்கத்தங்கம்” சோனியாவாக இருந்திருந்தால் சிலைஞர் கருணாநிதி கோபாலபுரத்திலிருந்து விமானநிலையம் வரைச் சக்கர நாற்காலியிலேயே வந்து “அன்னையை” வரவேற்று அழைத்துச் சென்றிருப்பார். வந்தது அரசியல் அதிகாரத்தில் இல்லாத வெறும் தமிழ் அன்னைதானே, அதுவும் உடல்நிலை சரியில்லாதவர், அவரால் இந்தக் கருணாநிதிக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லையே, இந்த வெட்கம் கெட்டவனுக்கு வேண்டியது எதுவும் தரும் நிலையில் அந்த அம்மையார் இல்லையே, அப்புறம் எதற்கு அவர்கள் இங்கு வரவேண்டும்? இவனெல்லாம் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே அருகதை இல்லாதவன். இவனுக்கு ஊரெல்லாம் குடும்பம், மகன் மகளெல்லாம் மந்திரி, அல்லது பெரிய பதவியில், பேரன் பேத்தி எல்லாம் மந்திரி அல்லது ஆயிரக்கணக்கான் கோடிக்கு அதிபதி, பிரபாகரன் அன்னையிடம் என்ன பணம் இருக்கிறது? இவன் அவர்களை ஊருக்குள் விட? இந்த இழவெடுத்த சண் டி.வி.யும் கருணாநிதி டி.வி.யும் இந்த செய்தியை இதுவரை சொல்லவேயில்லை. சாமியார் படுக்கை அறைக் காட்சியை பத்து நிமிடத்துக்கு ஒருமுறை தனி அறிவிப்புச் செய்து அரை மணிக்கொருமுறை ஒளிபரப்பிய சண் டி.விக்கு இதெல்லாம் நடந்ததே தெரியாது. வெட்கம் மானம் மனசாட்சி எதுவுமில்லாமல் பணம் ஒன்றே குறியாக இருக்கும் கருணாநிதியும் அவரது குடும்பத்தாரும் அடிக்கும் கொள்ளைக்கும் அளவில்லை, செய்யும் அராஜகத்துக்கும் அளவில்லை. கருணாநிதியின் ஈனபுத்திக்கு, அவனுக்கு நல்ல சாவே வராது. இது என்னுடைய சாபம் மட்டுமல்ல, ஈழத்தமிழர்களை நேசிக்கும் அனைவரின் சாபம்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen