Samstag, 10. April 2010

எம் தமிழீழ உறவுகள் நாய்களைவிட கேவலமாக நடத்தபடுகிறார்கள்

தாய் தமிழகத்தில் எம் தமிழீழ உறவுகள் நாய்களைவிட கேவலமாக நடத்தபடுகிறார்கள் -தமிழக சட்ட மன்றத்தில் தி.வேல்முருகன்
தமிழக சட்டசபையில் இன்று பேசும் போது : இலங்கையிலிருந்து இங்கே எம் உறவுகள் வருகிறார்கள் அவர்கள் வரும் போது நிலத்தை விற்று தங்கள் நகைகளை விற்று படகுகளில் வருகிறார்கள்,வரும் போது எல்லாவற்றையும்  இழந்து அனாதைகளாக வருகிறார்கள் அவர்களை நமது காவல்த்துறை விசாரணை என்றபெயரில் செய்கிற கொடுமைகள், அச்சுறுத்தல்கள் அந்த முகாம்களை பார்த்து முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும் அங்கு அவர்கள் நாய்களை விட கேவலமாக நடத்தபடுகிறார்கள். அவர்களி அப்பாவி தமிழர்கள் அவர்களை செங்கல்பட்டு முகாமில் காவல்த்துறையினைர் கொண்டு தாக்குதல் நடத்தி காவல் நிலையத்தில் கொண்டுபோய் போட்டிருக்கிறார்கள் அங்கு 33 பேர் காயப்பட்டு இருக்கிறார்கள் இதை முதலமைச்சர் கவனத்திற்க்கு கொண்டுவர விருப்புகிறோம்.படகுகளில் வரும்போது திட்டுகளில் மாட்டி கொண்டு நான்கு ஐந்து நாட்கள் பசியாய் வந்து மயக்கதில் இருக்கும் அவர்களை மருத்துவமனையில் சேர்க்காமல் அவர்கள் உயிரை காப்பாற்றாமல் உணவு கொடுத்து காப்பற்றும் நடவடிக்கையை விட்டு அவர்களை காவல் நிலையத்தில் கொண்டுபோய் விசாரணை என்ற பெயரில் நீ புலியா என்று மிரட்டுகிறார்கள்,அச்சுறுத்தல் இருந்தால் விசாரணை செய்யட்டும் .நாங்கள் மறுக்கவில்லை .அந்த உயிர்களை காப்பாற்றி விட்டு அவர்கள் மீது தவறு இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கட்டும் .அதே போன்று இலங்கையிலிருந்து கடவு சீட்டுடன் வரும் எம் உறவுகள் இங்கிருந்து அவர்கள் உறவுகள் வாழும் உலகநாடுகளுக்கு செல்வதற்க்காக  தடையில்லா சான்று (NOC) கேட்கிறார்கள் சம்மந்தபட்ட காவல் நிலையத்தில் அதை தருவதற்க்கு திரும்ப திரும்ப அலைகழித்து அவமானப்படுத்தி அசிங்கபடுத்தி மிகப்பெரிய சங்கடத்திற்க்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.தங்கள் ஆட்சியில் இது தொடரக்கூடாது என்று கேட்டு கொள்கிறேன்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen