ஜனநாயாக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எதிர்க்கட்சிகலின் சார்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடு சரத் பொன்சேகவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற இம்முக்கிய பேச்சுவார்த்தையின் போதும் ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்,
சரத் பொன்சேக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் அதனையடுத்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் பதவியேற்கும் இடைப்பட்ட காலத்திற்குள் உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் மனோகணேசன், சரத் பொன்சேகவிடம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தமிழ் மக்கள் தொடர்பிலான உடனடி பிரச்சினைகளான தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், காணாமல் போனோர், போராளிகளின் புனர்வாழ்வு, யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள், 1983 முதல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இடம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது மீள் குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக இடம்பெயர்ந்தோர் மற்றும், அவர்களது நிலங்கள் மீள் கையளிக்கப்படல் தொடர்பாக இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில், யாழ் விஜயம் மேற்கொண்டு திரும்பிய மனோ கணேசன், அங்கு யாழ் மக்களால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலேயே சரத் பொன்சேகவுடன் இச்சந்திப்பை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Montag, 14. Dezember 2009
மனோ கணேசன், பொன்சேக இடையே மீண்டும் திடீர் சந்திப்பு - யாழ் மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்வு!


0 Kommentare:
Kommentar veröffentlichen