Mittwoch, 4. September 2013

விழிப்புடன் இல்லாத இந்தியா

மிகப்பெரிய பொருளாதாரச் சறுக்கலை இந்தியா எதிர்கொள்ளும் இந்த நிலைமையிலும்கூட, நமது நாடு திவாலாகாமல் காப்பாற்றுவது இந்திய சமூகத்தின் குடும்ப அமைப்பும், நமது சேமிப்பு உணர்வும்தான் என்பதைப் பார்த்தோம்.  ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையும் பொறுப்பின்மையும் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமல்ல, நமது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகி விட்டிருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மேற்பார்வையில், 587 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலதனப் பொருள்களால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு சரிந்தது. வேடிக்கை என்னவென்றால், இறக்குமதி செய்யப்பட்ட இந்த மூலதனப் பொருள்களில்...

Dienstag, 23. Juli 2013

பணத்தை பதுக்கும் காமெடியர்கள்: மயில்சாமி பாய்ச்சல்

சம்பாதித்த பணத்தை காமெடி நடிகர்கள் பதுக்குவதாக மயில்சாமி குற்றம் சாட்டினார். நகைச்சுவை நடிகர் கருணாஸ் ரகளபுரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்தது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி தானு, டைரக்டர் நாராயணசாமி, நடிகர்கள் மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், நடிகை சஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் மயில்சாமி பேசியதாவது:– கருணாசையும், கஞ்சா கருப்பையும் நான் பாராட்டுகிறேன். சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து படங்கள் தயாரிக்கிற இரண்டே இரண்டு காமெடியர்கள் இவர்கள் மட்டும்தான். இந்த காமெடி நடிகர்களால் திரையுலகில் உள்ள...

Montag, 10. Juni 2013

நாளாந்தம் 15 ஆயிரம் ரூபாவை பிச்சையாகப் பெற்றவர் கைது

பிச்சையெடுப்பதன் மூலம் நாளொன்றுக்கு 15,000 ரூபாவை பெறும் பிச்சைக்காரரொருவரை பொரளைப் பொலிஸார் கைதுசெய்து மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்த போது நீதிவான் ரஷந்த கொடவெல பிச்சைக்காரரை எச்சரித்து விடுதலை செய்தார். நாளாந்தம் பல குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் நாடு முழுவதும் சுதந்திரமாக நடமாடும் போது அவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்காமல் பிச்சைக்காரர்களை கைதுசெய்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்வது ஏன் என்றும் நீதிவான் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார். பொரளை சுரங்கப்பாதையில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சை எடுத்ததாக பொரளை பொலிஸார் ஒரு யாசகரை கைதுசெய்ததாகவும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை பிச்சை எடுத்ததில் இந்நபர் 1500...

Samstag, 16. März 2013

கவிஞர் வைரமுத்துவின் அப்பா மரணம்

கவிஞர் வைரமுத்துவின் அப்பா ராமசாமி தேவர்(87) சிறுநீரக கோளாறு காரணமாக மரணம் அடைந்தார். தேனிமாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி‌யை சேர்ந்தவர் ராமசாமி தேவர். கவிஞர் வைரமுத்துவின் அப்பாவான ராமசாமி தேவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது, அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடியும் அவரது உயிர் சிகிச்சை பலன் இன்றி இன்று(16.03.13) பிரிந்தது. ராமசாமி தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், வைரமுத்து, பாண்டியன் ‌என்ற இருமகன்களும், விஜயலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் வைரமுத்து. நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகி, கவிப்பேரரசாக...

Donnerstag, 9. Februar 2012

நடிகர் அமிதாப்பச்சனுக்கு, ஆபரேஷன்

நடிகர் அமிதாப்பச்சன்(69) போஜ்புரி மொழியில் தயாராகும் ’கங்காதேவி’ என்ற படத்தில், தன் மனைவி ஜெயாவுடன் தற்போது நடித்து வருகிறார். அவருக்கு, சில நாட்களாக வயிற்று வலி இருந்து வருகிறது. இதுபோன்ற வலி தொடர்வதால், டாக்டர்கள் அவரது வயிற்றை பரிசோதித்தனர். இன்று அவருக்கு, சி.டி., ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட உள்ளது. இதையடுத்து, நாளை மறுநாள் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்படும் என, டாக்டர்கள் கூறியுள்ளன...

Donnerstag, 5. Januar 2012

ஆபத்தில் இந்திய விமானத்துறை?

இந்தியாவின் பயணிகள் விமானப்போக்குவரத்துத்துறையின் தலைமை இயக்குநர் பரத் பூஷன், இந்தியாவின் பல உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்களின் நிதி நிலைமைகள் கவலையளிக்கக் கூடிய வகையில் இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த நிதி நெருக்கடியானது பயணிகள் பாதுகாப்பு குறித்து பல கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சுகவீனத்தை காரணம் காட்டி விமான ஓட்டிகள் விடுப்பு எடுப்பது ஒரு தொற்றுநோய் போல உள்ளது என்றும் அது விமான சேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் பரத் பூஷன் கூறுகிறார். நிதிநிலை மோசமாக இருக்கும் விமான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமத்தை...

Pages 381234 »