Dienstag, 8. Juni 2010

மதுரையில் கொடும்பாவி எரித்து மூவர் கைது

 

மகிந்த ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மகிந்த ராஜபக்சேவின் கொடும்பாவியையும், சிறீலங்கா தேசியக்கொடியையும் எரித்த மூவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்சேவியின் இந்திய வருகையைக்கண்டித்து தமிழக முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதே போல் மதுரையில் நடைபெற்ற போராட்டத்தின் பொழுது மகிந்தவின் உருவப்பொம்மை மற்றும் சிறீலங்கா தேசியக்கொடியையும் எரித்த நாம் தமிழர் இயக்கத்தொண்டர்கள் திருப்பரங்குன்றம் செந்தில், மருது மற்றும் பிரபாகரன் ஆகியோ கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இவர்கள் மூவரும் இன்று மாலை நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen