Sonntag, 21. März 2010

அடுத்த கட்ட ஈழ போர் நடக்குமா?

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்ப்பது அடுத்த கட்ட ஈழ போர் நடக்குமா? அப்படி நடந்தால் அதை நடத்த போவது யார்.அது எந்த வடிவத்தில் இருக்கும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி ஒவ்வொரு தமிழன் உள்ளத்திலும் ஒலித்து கொண்டிருக்கிறது .




அடுத்த கட்ட ஈழ போர் ஆயுத போராகவோ அல்லது உலக நாடுகள் துணையுடன் போராட்ட குணமிக்க அரசியல் போராகவோ இருக்கலாம் .எப்படி இருந்தாலும் அடுத்த கட்ட ஈழ போரில் தமிழ் நாட்டில் பெரும் பங்கு வகிக்க போவது நாம் தமிழர் அரசியல் இயக்கம் மட்டும்தான். அது ஆயுத போராக அல்ல. போரரட்ட குணமிக்க அகிம்சை போராக தமிழ் நாட்டில் நடக்க போகிறது.



இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? தமிழ்நாட்டு அரசியலை நிர்வகிக்கும் பொறுப்பை இங்குள்ள இன துரோகிகளிடம் இருந்து முதலில் நாம் கைப்பற்ற வேண்டும். பிறகு இங்குள்ள ஒவ்வொரு தமிழனையும் முதலில் மொழி இன உணர்வுள்ள தமிழனாக மாற்ற வேண்டும். அது ஒன்றும் கடினமான காரியம் அல்ல.அரசியல் அதிகாரத்தை நாம் கைப்பற்றினால் காவல் துறை நம்மிடம் இருக்கும்.



தொலைகாட்சிகளில் வானொலியில் தினமும் எழுச்சி மிகு பாடல்களை ஒளிபபுவதன் மூலம் சாதிக்கலாம். பழைய கண்ணதாசன் பாடல்களில் குறிப்பாக MGR பாடல்களில் உணர்வுள்ள ஒழுக்கமுள்ள கருத்துக்களை நாம் பாடல்களாக நம் மனதில் பதிந்திருப்பதை கூறலாம். பள்ளி பாடங்களில் தமிழனின் வீர வரலாறை கட்டாய பாடமாக்குவதன் மூலமும் அத்தகைய வரலாறை திரைபடங்களாக தயாரித்து இலவசமாக ஒளிபரப்புவதன் மூலமும் சாதிக்கலாம்.



தன் தந்தை தாய் எவ்வளவு கடினப்பட்டு வளர்த்து ஆளாக்குகிறார்கள் என்பதை அவர்களின் மக்கள் உணரும் போது தான் அவர்களின் அருமையும் அன்பும் அவர்களுக்கு புரியும். அவர்களுக்காக தன் உயிரையும் வாழ்கையும் அர்பணிக்க தோன்றும்.



அது போலவே ஒரு மண்ணின் வரலாறு நாம் அறியும் போதுதான் அம மண்ணின் மீது நமக்கு அன்பு பிறக்கும்.அம மண் நமக்கு உரிமையானது நம்மிடமிருந்து அபகரிக்கப்பட்டுள்ளது எனபது புரியும் போது தான் அம் மண்ணை மீட்க வேண்டும் ,போராட வேண்டும் என்ற என்ன தோன்றும்.அதனால் ஈழத்து மண்ணின் வரலாறை இங்கு பாட புத்தகத்திலிருந்தே கொண்டு வர வேண்டும். இங்குள்ள ஒவ்வொரு தமிழனும் அறியும்படி செய்ய வேண்டும்.



இதை நாம் தமிழராய் ஒற்றுமையாக இருந்து சாதித்தோமானால் தமிழனுக்கு என்று ஒரு தனி நாடு மலர்வது நிச்சயம். அடுத்த கட்ட போர் அரசியல் வழியாக இருந்தாலும் ஆயுத வழியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் நாமெல்லாம் ஒன்று சேர்ந்து ஒட்டு மொத்த தமிழ்நாடே உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டும் இங்கயிருந்து ஒரு குண்டூசி கூட தமிழ்நாட்டை விட்டு வெளியேற கூடாது செய் அல்லது செத்து மடி என்பதே ஒட்டு மொத்த தமிழனின் கொள்கையாக இருக்க வேண்டும்.



இந்த இத்தாலி இந்திய அரசாங்கம் ஒன்று நமக்கு உதவி செய்ய வேண்டும் அல்லது நம்மை ஒட்டு மொத்தமாக கூண்டோடு அழிக்க வேண்டும். இல்லையேல் நம்மை தனியாக சுதந்திரமாக விட்டு விட வேண்டும் இம் மூன்றில் ஒன்றாவது கண்டிப்பாக நடைபெற வேண்டும்.



என்றால் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை நாம் வென்றெடுக்க வேண்டும். இதற்க்கு நாம் தமிழர் செயல் வீரர்கள் தன்னலம் மறந்து தமிழினம் நினைந்து போராட வேண்டும். நம் மரியாதை சூடு சொரணை என்று கூறுவார்களே அதை அத்தனையும் துறந்து நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு களை மறந்து போராட வேண்டும்.இன்று சிறுதுளியாக இருக்கும் நாம் மே 18ற்கு அணிதிரட்ட போகும் பெரும் மக்கள் கடலை பார்த்து உலக தமிழினமே மகிழ்சி கடலில் ஆளபோகிறது.



அடுத்த கட்ட ஈழ போர் தேசிய தலைவரின் வழிகாட்டுதலில், உலகையே அதிர்ச்சியில் உறைய வைக்கும் புலம் பெயர் தமிழர்களின் உதவியுடன் , இந்தியாவை அரசியல் ரீதியாக முடக்கும் நாம் தமிழர் பங்களிப்புடன், புலியாக மாறும் ஈழத்து மக்கள் தியாகத்துடன் நம் மண்ணை மீட்பதற்கான போராட்டம் நாளை நிச்சயம் நடந்தே தீரும். இதை மனதில் ஏற்றி கொண்டு நம் இயக்கத்தை அரியணையில் ஏற்ற கடுமையாக போராடுவோம்.



மே 18 நமது அரசியல் இயக்கத்தின் துவக்க விழா . தமிழினத்தின் விடியலின் ஆரம்ப விழா வீறு நடை போடுவோம் விடியலை நோக்கி அலைகடலென அணி திரளுவோம் மதுரையை நோக்கி "



"நாளைய தமிழினத்தின் எதிகாலம் "நாம் தமிழர்" நம் கையில்"

" நாம் தமிழராய் ஒன்றிணைந்து மீட்டெடுப்போம் தமிழீழத்தை"

.

இரு தமிழனாக இரு. இரு உணர்வுள்ள தமிழனாக இரு

இரு தமிழினத்தை காக்க உயிர் கொடுக்கும் தமிழனாக இரு

எழு தமிழின துரோகிகளை அழிக்கும் நெருப்பாய் எழு.

எழு தமிழனை தமிழனாக மாற்றுவதற்கு எழு





தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்)
  • மேலதிக செய்திகளுக்காக
  • 1 Kommentare:

    ۞உழவன்۞ hat gesagt…

    நம் மண்ணை மீட்பதற்கான போராட்டம் நாளை நிச்சயம் நடந்தே தீரும்.

    Kommentar veröffentlichen