Donnerstag, 10. Dezember 2009

தமிழர் உயிர் மட்டும் மட்டமா ?

இலங்கையில் போரை நிறுத்தச்சொல்லி


எத்தனையோ பேர் உயிர் மாயித்தனர்

உண்ணாவிரதம் இருந்தனர் பலர்

உயிரையும் உடலையும் தீயுக்கு இரையாக்கினர்

மாவீரன் முத்துக்குமார் மரித்த்போதே

மூர்க்கப்போரை நிறுத்தியிருந்தால்

ஈழத்தில் லட்சம் உயிர் வாழ்ந்திருக்கும்

ஈழ தமிழும் அழகாய் நிலைத்திருக்கும்

கடுமையாக கவன ஈர்ப்பு செய்த போதும்

கண்டுகொள்ளவில்லை ஆளும் காங்கிரஸ்

ஒட்டுமொத்த தமிழினமே அழிந்தது ஈழத்தில்

ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை

விலை மதிப்பற்ற மனித உயிர்கள்

விலை போனது காங்கிரஸ் அலட்சியத்தால்

தனி ஒரு மனிதன் சந்திரசேகர் உண்ணாவிரதத்தால்

தனி தெலுங்கானா உருவாக்க சம்மதித்த காங்கிரஸ்

இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் ஒருவர்

இனி உண்ணாவிரதம் இருந்தால் பிரிப்பார்களா ?

தெலுங்கர் உயிர் மட்டும் உசத்தியா ?

தமிழர் உயிர் மட்டும் மட்டமா ?

மவுனமாக இருந்தே மவுன வலி தந்தனர்

மவுனமாக இருந்தே தமிழர் தக்க பதில்தருவர்

இரா .இரவி

  • மேலதிக செய்திகளுக்காக
  • 1 Kommentare:

    eraeravi hat gesagt…

    pl visit my new web www.eraeravi.com

    Kommentar veröffentlichen