skip to main |
skip to sidebar

Freitag, April 23, 2010

வானதி
பிரபாகரன் உயிரோடுஇருக்கிறார்- தமிழக சட்டமன்றத்தில் தி.வேல்முருகன்.
தமிழீழ தேசிய தலைவரின் தாயாரை திருப்பி அனுப்பியதை கண்டித்து சட்ட மன்றத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தி.வேல்முருகன்: பாகிஸ்தான்,சீனா மற்றும் பல நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருகிறார்கள்.அவர்களையெல்லாம் அனுமதிக்கும் அரசு தமிழீழ விடுதலைக்காக போராடிவரும் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் தாயாரை அனுமதிக்கவில்லை அதையும் தாண்டி சிகிச்சைக்காக வந்த அந்த வயதான தாயை அனுமதிக்காதது ஒரு மனிதநேயமற்ற, ஈவுஇரக்கமற்ற செயல், உண்மையாக இது கண்டிக்க தக்க செயல் என்றும் மனிதநேயமுள்ள எந்த மனிதனும் ஏற்றுகொள்ள மாட்டார்கள் மேலும் தேசிய தலைவரின் தாயருக்கு மருத்துவ சேவை அளிக்கவும் அந்த செலவை தமிழக அரசே செய்ய வேண்டும் என கேட்டு கொண்டதோடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூறியபோது அதற்கு மறுத்து பதிலளித்த தி.வேல்முருகன் தேசியதலைவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றும் இதுவரை இலங்கை அரசாங்கம் தலைவரின் இறப்பு சான்றிதழை இந்திய அரசுக்கு அளிக்கவில்லை அவருடைய பிணக்கூறு ஆய்வு சான்றிதழையும் அளிக்கவில்லை என்றும் கூறினார் மேலதிக செய்திகளுக்காக
0 Kommentare:
Kommentar veröffentlichen